adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ரிஷபம்: 2023 புத்தாண்டு பலன்கள்

#astrologeradityagurujinewyearpalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் ஆரம்பத்தில் குரு லாப ஸ்தானத்தில் இருக்கிறார். நான்கு மாதங்களில் அவர் பன்னிரண்டாம் இடத்திற்கு மாறுவது சாதகமற்ற அமைப்பு என்பது போல தோன்றினாலும் கூட, குரு 12ல் வரும் பொழுது சுப விரையங்களை தருவார் என்பதால் உங்களது வருமானமும் இந்த வருடத்தில் நிறைவாகவே இருக்கும்.


12ம் இடத்தில் இந்த வருடம் குரு, ராகு சேர்க்கை நடப்பது. ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில். குடும்பத்தில் சொத்து சேர்க்கை அல்லது வீட்டிற்கு ஆபரண சேர்க்கை போன்றவைங்களை குறிக்கிறது என்பதால். இந்த வருடத்தில் ரிஷபத்துக்கு ஏதேனும் ஒரு ஆதாயம் தருகின்ற. நிகழ்வு உண்டு.

கடந்த மூன்று வருடங்களாக உங்களுடைய பாக்கிய ஸ்தானத்தில் சனி இருந்து. எதையும். நல்லவிதமாக அனுபவிக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தார். இந்த வருடத்தில் அந்த நிலை மாறி ஜீவன ஸ்தானமாகிய பத்தாம் இடத்திற்கு சனி வருகிறார். பாபக் கிரகங்கள் பத்தாமிடத்திற்கு வருவது நல்ல பலன்களை தரும் என்பதாலும், சென்ற ஆண்டில் இருந்த ஒன்பதாமிடத்தை விட, சனிக்கு பத்தாம் இடம் நல்லது என்பதன் அடிப்படையிலும் ரிஷப ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற 2023ம் ஆண்டு நன்மைகளை மட்டுமே தரும்.

இளைய பருவ ரிஷப ராசிக்கார்கள் பலர் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பாதிப்புகளை அடைந்து தன்னம்பிக்கையை இழந்திருக்கிறீர்கள்.  சிலருக்கு நல்லவேலை இல்லை, சிலருக்கோ வேலையே இல்லை. இன்னும் சிலருக்கு கிடைத்த வேலை கை நழுவிப் போய்விட்டது. இன்னும் சிலரின் வாய்ப்பை அடுத்தவர்கள் தட்டிப்பறித்து சென்றுவிட்டார்கள் என்ற நிலைதான் சென்ற வருடம் ரிஷப ராசிக்கு நடந்து கொண்டிருந்தது. அது இந்த ஆண்டு மாறும்.

சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அரசு ஊழியர்களுக்கு நன்மைகள் உண்டு. அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் நல்லபலன்கள் நடக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும்.

இந்த வருடம் முழுவதுமே ஆறாம் இடத்தில் கேது இருப்பதால் எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. தொழிலை விரிவு படுத்தும் எண்ணங்கள் ஈடேறும். எல்லா வகையிலும் நல்ல மாறுதல்கள் இருக்கும் வருடம் இது. பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி விடுதி, லாட்ஜிங், வாகனங்கள், வாடகை, கலைத்துறை, டெக்ஸ்டைல்ஸ் போன்றவைகளில் சிலருக்கு வருமானம் வரும்.

கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள். கடந்த வருடம் ரிஷப ராசிக்காரர்களின் ஆளுமைத்திறன் பாதிக்கப்பட்டு உங்களில் சிலர் நற்பெயரை இழந்து விட்டிருப்பீர்கள். இது போன்றவர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு புத்துணர்வும், நற்பெயரும் கிடைக்கும் என்பதால் பெரியவருத்தங்கள் எதுவும் இந்தவருடம் இல்லை.

தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும். பணியாளர்களுக்கு நல்ல சம்பளத்துடன் நினைத்து போலவே வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இதுவரை உங்களுக்கு தொல்லையாக இருந்தவைகள் அனைத்தும் விலகி ஓடும். சில தொழில் முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெறுவீர்கள். விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும்.

அருமையான வீடு கட்டலாம். பிளாட் வாங்க முடியும். நல்ல வீட்டிற்கு குடி போகலாம். வாகனயோகம் சிறப்பாக இருக்கிறது. பழைய வண்டியை விற்று விட்டு புதியதாக நல்ல மாடல் வாங்குவீர்கள். வாக்குஸ்தானம் வலுப்பெறுவதால் பேச்சினாலேயே மற்றவர்களை கவர்ந்து அதனால் லாபமும் அடைவீர்கள். பேசுவதன் மூலம் பணம் வரும் துறைகளான ஆசிரியர் பணி, மார்கெட்டிங் போன்ற விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலர்கள், கவுன்சிலிங் போன்ற ஆலோசனை சொல்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த வருடம் மிகவும் நன்மைகளைத் தரும்.

பெண்கள் மேன்மை அடைவீர்கள். வேலைக்குப் போகும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் மாறி மாறி அவஸ்தைப்பட்ட நிலைமை மாறி நிம்மதி கிடைக்கும். பெண்கள் செய்கின்ற தொழிலில் அதிக முயற்சி இல்லாமலேயே நிறைந்த லாபங்கள் கிடைக்கும். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அமைப்பில் பண வரவு தற்போது இருக்கும்.

அலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

கூட்டுக் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும்.

கணவன், மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.

தொழிலதிபர்களுக்கு முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத் தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். முதியவர்களின் பேச்சை வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். அவர்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். ஆன்மீக ஈடுபாடும், கோவில் குளங்களுக்கு செல்வதும் நடக்கும். தள்ளிப் போன காசி, ராமேஸ்வர யாத்திரைகளுக்குச் செல்லலாம்.

கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் வருடம் முழுவதும் நல்லபலன்கள் அவர் மூலமாக கிடைக்கும்.  யூக வணிகத்துறைகளும், பங்குச்சந்தையும் கை கொடுக்கும்.

பன்னிரண்டாம் வீடு குருவின் இருப்பால் வருட பிற்பகுதியில் சுபத்துவத்தை அடைவதால் வெளிநாடு, வெளிமாநிலம் போன்றவைகள் இப்பொழுது ரிஷப ராசிக்காரர்களுக்கு கை கொடுக்கும். பாஸ்போர்ட், விசா போன்றவைகளில் இருந்த சிக்கல்கள் தீரும். வெளிநாட்டில் வசிக்கும் ரிஷபத்தினருக்கு இது ஆதாய காலமாகும்.  இருக்கும் நாட்டில். குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி கிடைக்கும். கிரீன்கார்டு வாங்குவீர்கள். தொலைதூர நன்மைகள் வருடம் முழுவதும் ரிஷபத்திற்கு உண்டு. சிலருக்கு அடிக்கடி பயணங்களும் அதனால் பொருள் வரவும் இருக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள் சிலர் இந்த வருடம் திடீர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் இந்த வருடம் உங்களால் சாதிக்க முடியும். யூடியூப், பேஸ்புக் போன்ற ஊடகங்களின் மூலமான வருமானங்கள் உங்களுக்கு இந்த வருடம் குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்கும். இணையத்தில் சாதிக்க முடியும்.

ரிஷபத்திற்கு திருப்பு முனையான வருடம் இது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.