adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

கடகம்:

கடக ராசி இளைய பருவத்தினர் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை நினைத்து  குடும்பத்திலும் கலக்கங்கள் இருக்கின்றன. அஷ்டமச்சனியின் தாக்கத்தால் சிலருக்கு மனதில் ஒருவிதமான கலக்க உணர்ச்சியும், தன்னம்பிக்கை இல்லாத நிலைமையும் இருக்கும். அழ வேண்டும் போலவும் இருக்கும். அலுவலகங்களில் எரிச்சலூட்டும் சம்பவங்களையும் சந்திப்பீர்கள். ராசிநாதன் வார ஆரம்பத்தில் ஆட்சி நிலையில் இருப்பதால் எதையும் உங்களால் சமாளிக்க முடியும் அடுத்த வருடத்திலிருந்து நன்றாக இருப்பீர்கள். கஷ்டங்கள் எதுவும் வந்துவிடாத வாரம் இது.  

உங்களில் பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த சிலருக்கு இனம் புரியாத தயக்கங்கள், மனக் கலக்கங்கள் இருக்கும். நண்பர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் சில நெருடல்களும், கருத்து வேறுபாடுகளும் வரும். ஒருவர் கோபப்பட்டாலும் மற்றவர் பொறுத்துப் போவதன் மூலமாக பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள். பெரிய அளவில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்கள் பணம் எடுத்து போகும்போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. 

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

கடகம்:

மார்ச் மாதம் கடக ராசிக்காரர்களுக்கு யோக மாதமாக இருக்கும். யோகாதிபதி செவ்வாய் உச்சம் பெற்ற நிலையில் சுபத்துவமாகி ராசியைப் பார்க்கிறார். சூரியனும், குருவும் நன்மை தரும் நிலையில் இருக்கிறார்கள். உங்களின் பல நாள் எதிர்பார்ப்புகளை இந்த மாதம் நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்களில் சிலர் புதிய வாய்ப்புகளை அடைவீர்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு நல்ல பலன்கள் உண்டு. வாழ்க்கைத்துணை மூலம் சந்தோஷம் உண்டு. சிலருக்கு கோவில் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சிதிலமடைந்து ஊருக்கு வெளியே கவனிப்பாரின்றி கிடக்கும் சிவன் கோவிலை புனருத்தானம் செய்யும் பாக்கியமும் அதன் மூலம் புண்ணியமும் கிடைக்கும். சிவன் அருள் கிடைக்க பெறுவீர்கள்.


திருமணமாகாத இளையவர்களுக்கு இந்த வருடக் கடைசியில் திருமணம் முடியும். சிலர் காதலிக்க ஆரம்பித்து தங்களுடைய வாழ்க்கைத்துணையை அடையாளம் காண்பீர்கள். கூட்டு வியாபாரத்தில் குறைகளை கண்டவர்கள் அவை நீங்கி தொழில் முன்னேற்றம் காண்பார்கள். குறிப்பிட்ட ஒரு பலனாக தகப்பனாரின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை மகனுக்கு இடையே இருந்து வந்த சண்டை, சச்சரவுகள், பிணக்குகள் நீங்கி தந்தையுடன் இணைவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கோரிக்கைகளை அப்பா நிறைவேற்றித் தருவார். நீங்களே ஒரு நல்ல தகப்பனாக உங்கள் குழந்தைகளுக்கு கேட்பதை செய்து தர முடியும்.

ராஜ யோகாதிபதி செவ்வாய் சுக்கிரன் இணைந்து மங்கள யோகம் உண்டாவதால், சமூகத்தில் உயர்நிலையில் உள்ள பெரியவர்கள், மதிப்புமிக்கவர்கள், அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டவர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு அந்தஸ்து உயரும். அதிகார மிக்க பதவிகள் கிடைக்கும். அரசியலில் ஏற்றங்கள் உண்டு. போட்டிகளில் ஜெயிக்க முடியும். தொழிலில் ஏற்றமும், லாபமும் திருப்திகரமாக இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் இருக்காது. குறைந்த வியாபாரம் நிறைந்த லாபம் என்ற முறையில் கடையை மூடி வீட்டுக்கு திரும்பும் பொழுது மனநிறைவுடன் வீட்டிற்கு செல்ல முடியும். பெண்களுக்கு இது நல்ல மாதம். உங்களை புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொள்வார்.

1,3,7,8,10,11,17,18,20,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ம்தேதி இரவு 9.20 முதல் 10-ம்தேதி இரவு 8.40 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் எதையும் செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டாக யோசிப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537