adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கடகம்: 2023 புத்தாண்டு பலன்கள்

#astrologeradityagurujinewyearpalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

கடகம்:

சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் போன்றவைகளில் எந்தப் பக்கம் திரும்பினாலும் 2023 கடக ராசியைப் படுத்தி எடுக்கப் போகிறது, கடக ராசிக்காரர்கள் அதோ கதிதான், அவ்வளவுதான் என்பது போன்ற பயமுறுத்துகின்ற பலன்கள்தான். இப்பொழுது சொல்லப்பட்டு வருகின்றன.

உண்மையில் கடக ராசிக்கு 2023 அப்படித்தான் இருக்குமா? ஏன் இவ்வாறு அனைத்து ஜோதிடர்களும் ஒரே குரலில் கடக ராசிக்கு கெட்ட நேரம் என்று சொல்கிறார்கள்? அதனுடைய காரணம் என்ன?


ஒன்றுமில்லை. 2023ம் ஆண்டு கடகத்திற்கு அஷ்டமச்சனி ஆரம்பிக்க இருக்கிறது. கோட்சார ரீதியாக சனி எட்டில் வரும்போது அந்த ராசிக்காரர்களுக்கு சாதகமற்ற பலன்கள் நடக்கும் என்று சொல்லப்படுவது உண்மைதான். அதேநேரம் இப்போது சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை ராசிபலன்களில் கடுமையாகச் சொல்லப்படுவது போல் கடகம் அவ்வளவுதானா? அதோகதிதானா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை.

அஷ்டமச்சனி என்பது சாதகமற்ற பலன்களை தரக்கூடிய ஒரு நிலை என்றாலும் கூட அதனுள்ளும் ஏராளமான நுணுக்கங்கள் இருக்கின்றன. எப்போது கெடுதல் வரும்? கெடுதல் வருமா, வராதா என்பவைகளை துல்லியமாக நட்சத்திர வாரியாகவும் கணிக்க வேண்டும். அதைப் போலவே பிறந்த ஜாதக அமைப்பின்படி நல்ல தசா புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கும், பிறந்த நேரத்தில் வலுவான, சுபத்துவமான. சந்திரனைக் கொண்டவர்களுக்கும் அஷ்டமச்சனி பாதிப்புகளை கண்டிப்பாக தந்து விடுவது இல்லை.

ஜோதிடத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருப்பவன் என்கின்ற முறையில் உடைபட்ட நட்சத்திரங்களுக்கு. அஷ்டமச்சனி, ஜென்மச்சனி போன்றவை பெரிய பாதிப்புகளை தந்து விடுவதில்லை என்பதை அடிக்கடி கூறி வருகிறேன். அதன்படி கடக ராசியின் முதல் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு. இந்த 2023ம் ஆண்டு. கண்டிப்பாக பாதிப்புகள் எதுவும் இருக்காது.

அதேநேரத்தில் ஒரு முக்கிய கருத்தாக, கடந்த ஆண்டு. மிதுன ராசிக்காரர்கள் அஷ்டமச் சனியை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுதே, கடகத்தில் பிறந்த. புனர்பூசம் நான்காம் பாதத்தினருக்கும் பாதிப்புகள் இருந்தன. எனவே சென்ற வருடத்தோடு புனர்பூசம் நான்காம் பாதத்திற்கு கெடுதல்கள் முடிந்துவிட்டன. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் 2023 ம் ஆண்டு பாதிப்புகள் எதுவும் இருக்காது.

உங்களில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சில சாதகமற்ற தன்மைகள் இந்த வருட பிற்பகுதியில் அதாவது ஜூன் மாதத்திற்குப் பிறகு இருக்கவே செய்யும். அதுவும் உங்களின் பிறந்த ஜாதக தசா புக்தி அமைப்புகளின் அடிப்படையில் கூடுதல் குறைவாக இருக்கும். கோட்சார ரீதியில் அஷ்டமச் சனி வயதுக்கேற்ற வகையில் சில சாதகமற்ற அமைப்புகளை தரும் என்பது உண்மைதான். உங்களில் சிலருக்கு உறவு, நட்பு, பண விவகாரங்களில் படிப்பினைகள் இந்த வருடம் கிடைக்கும்.  

வருடம் முழுவதும் அஷ்டமச் சனி அமைப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும். கடினஉழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுங்கள். அஷ்டமச்சனி என்பது துன்பங்கள் என்ற பெயரில் அடுத்தவர்களிடம் எப்படி ஏமாறாமல் இருப்பது, எப்படித் தொழில் நடத்துவது. போன்ற அனுபவங்களைத் தரும் என்பதால் இளைய பருவ கடக ராசிக்காரர்களைப் பொருத்தவரை இந்த வருடம் அனுபவங்களைக் கற்றுக் கொள்ளும் வருடமாக இருக்கும்.

கடகத்தினர் இந்த வருடம் எதிலும் அகலக்கால் வைக்காமல் நிதானத்துடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டிருக்கும். பணத்தின் அருமையை உங்களுக்கு சனிதான் புரிய வைக்க வேண்டும் என்பதால் வெயிலில் இருக்கும் போதுதான் நிழலின் அருமை தெரியும் என்ற பழமொழியின்படி இந்த வருடம் பணத் தட்டுப்பாட்டினையும், கடன் வாங்க வேண்டிய நிலைமையையும் உருவாக்குவார். எனவே எதிலும் அகலக்கால் வைக்காமல், புதிதாக எதையும் தொடங்காமல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தால் மட்டும் போதும்.

இதுபோன்ற நேரங்களில் சனி புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி, ஆசை வார்த்தைகளை கூற வைத்து, சில தூண்டில்களை போட்டு ஒரு தொழில் ஆரம்பிக்க வைத்து அல்லது உங்களை புதிதாக ஏதேனும் ஒரு விஷயத்தில் நுழைத்து, புலி வாலைப் பிடிக்க வைப்பார். பிறகு அதனை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் சிக்கலுக்குள்ளாக்கி பரிதவிக்க வைப்பார் என்பதால் இந்த வருடம் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடமோ, இதுவரை தெரியாத ஒரு தொழிலை பற்றி தெரிய வந்தாலோ கவனமாக இருங்கள். குறிப்பாக உறவினர்களோடு சேர்ந்து தொழில் செய்ய வேண்டாம். உறவு கெடும்.  

வியாபாரிகள் தொழிலிடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பெரிய அளவில் பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.

உங்களில் சிலர் வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு சென்று பொருள் சம்பாதிப்பீர்கள். இதுவரை வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ இருந்த தடை நீங்குகிறது. அயல்தேசத்தில் செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு இப்போது கிடைக்கும். அதேநேரம் வேலை வாங்கித் தருகிறேன் என்று பணம் கேட்பவரிடம் பணம் கொடுக்க வேண்டாம். கண்டிப்பாக ஏமாற்றப் படுவீர்கள். ஏற்கனவே கொடுத்திருந்தால் பணம் திருப்ப வாங்குவது கஷ்டம். முழுமையாக வராமல் சிறுக சிறுக வந்து வீணாகும்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். அலுவலகங்களில் முதுகுக்குப் பின்னே பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக் குறைவாகவோ இருக்க வேண்டாம்.

சிலருக்கு. விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். சிலர் சனியின் ஆதிக்கத்தினால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

சிலருக்கு சொத்து விவகாரங்களில் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வரும். உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம். ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம். குடும்பப் பிரச்னைகளும் நீதிமன்றம் செல்லக் கூடிய காலகட்டம் இது.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம். பேராசை பெரு நஷ்டம் போன்ற நிலைமைகள் இப்போது இருக்கும். ஸ்பெகுலேஷன் துறை பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள். வட்டித்தொழில் செய்பவர்கள் கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு தகுதியற்ற நபர்களுக்கு கடன் கொடுக்காதீர்கள். கொடுத்த பணம் திரும்பி வராது.

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை அணுகுவது நல்லது.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

பெண்களுக்கு நல்ல பலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தில்  செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். கடக ராசிக்கு ஆரம்பத்தில் கவனமாக இருக்க வைத்து பிற்பகுதியில் நல்லவை நடக்கும் வருடமாக இது இருக்கும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.