
துலாம்:
ராசிநாதன் சுக்கிரனுக்கும், ராசிக்கும் குரு பார்வை என கிரகங்கள் நல்ல நிலையில் உள்ள வாரம் இது. துலாத்திற்கு இது மாற்றங்களை அளிக்கின்ற வாரம். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் சிலருக்கு பெண்கள் சம்பந்தப்பட்ட லாபங்கள் உண்டு. இளைய பருவத்தினருக்கு வரன் பார்த்தல், நிச்சயம் போன்ற சுப விஷயங்கள் நடக்கும். உங்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புகள் இப்போது நிறைவேறும். பணவரவுக்கு தடை ஏதும் இல்லை. பொருளாதார நிலைமை நன்றாகவே இருக்கும். தொழில் வேலை வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் திருப்திகரமான நல்லபலன்கள் உண்டு.
அனைத்து துலாம் ராசிக்காரர்களுக்கும் ஏதேனும் ஒருவகையில் நல்லவை நடக்கும். இளைய பருவத்தினர் காதல் கொள்வீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். கடன் பிரச்னைகள் தொல்லை தராது. எடுத்த காரியம் வெற்றி பெறும். நினைத்தது நடக்கும். 2,3 ஆகிய நாட்களில் பணம் வரும். 3-ம்தேதி மதியம் 12:15 மணி முதல் 5-ம்தேதி காலை 6.59 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ செய்ய வேண்டாம். இந்த நாட்களில் எதையும் செய்யும் முன் ஒன்று இரண்டாக யோசிப்பது நல்லது.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
துலாம்:
ஒரே நேரத்தில் ராசிக்கும் ராசிநாதன் சுக்கிரனுக்கும் குரு பார்வை கிடைக்கப் பெறுவதால் இது துலாத்தினருக்கு அதிர்ஷ்டமான மாதம்தான். மாதம் முழுவதும் குருவின் பார்வை ராசிக்கு பலமாக இருப்பதால் அக்டோபர் உங்களுக்கு கெடுதல்களை செய்யாது. உங்களில் சிலருக்கு தற்போது வேலை, தொழில், அமைப்புகளில் இருக்கும் தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் இனி மாறி விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும். தடங்கலாகி வந்த சில விஷயங்கள் எண்ணம் போல் நிறைவேறும். வீட்டில் சுபகாரியம் உண்டு. ராசிநாதன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் இதுவரை வேலை தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற அமைப்புகளில் லாபமே இல்லாத துலாம். ராசிக்காரர்களுக்கு இனிமேல் தொட்டது துலங்கும். எல்லா நிலைகளிலும் லாபம் வரும்.
மாத ஆரம்பத்தில் புதன் உச்சம் என்றாலும் மாத பிற்பகுதியில் செவ்வாயுடன் இணைந்திருப்பதால் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். ஏழாமிடத்தில் குருவுடன் இணைந்திருக்கும் சுபத்துவ ராகுவும் நல்ல பலன்களைச் செய்வார் என்பதால் மிக முக்கியமான நபர்களிடமிருந்து இப்போது எதிர்பார்க்கும் உதவிகளைப் பெற முடியும். அந்நிய மத, இன, மொழி நண்பர்கள் உதவுவார்கள். ராசியில் உள்ள கேது இதுவரை தரிசிக்க இயலாத புனிதத் தலங்களை சென்று பார்க்கும் வாய்ப்பினை தருவார். வாழ்க்கைத்துணை விஷயத்தில் சில நெருடல்களும், கருத்து வேறுபாடுகளும் வரும். குடும்பத்தில் ஒருவர் கோபப்பட்டாலும் மற்றவர் பொறுத்துப் போவதன் மூலமாக பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.
சிலருக்கு முதல் திருமண தொடர்புகளின் மூலம் நிம்மதியற்ற சூழல்கள் இருக்கும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சகோதர உறவு சற்று முன்பின்னாகத்தான் இருக்கும். பங்காளிகளை நம்ப வேண்டாம். வருமானத்திற்கு குறைவு இருக்காது. பணப்புழக்கம் கையில் இருக்கும். பணம் புரளும் இடங்களில் பணிபுரிபவர்கள், வங்கித்துறையினர் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள். சுடச்சுடத்தான் தங்கம் பொலிவு பெறும் என்பது போல கடந்த இரண்டு வருடங்களில் உங்களுக்கு கிடைத்த அனுபவங்களால் இனிமேல் முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். அறிமுகமற்றவர்களை எதிலும் நம்பி விடாதீர்கள். புதிய நண்பர்களால் பிரச்னைகள் வரும். கவனம்.
1,2,3,8,9,11,12,14 ஆகிய நாட்களில் பணம் வரும். 3-ம் தேதி பகல் 12.15 முதல் 5 -ம் தேதி காலை 6.59 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகம் ஆகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.