
சிம்மம்:
உச்சனோடு, உச்சனின் வீட்டில் ராசிநாதன் சூரியன் அமர்ந்திருக்க, ராசியை குரு பார்ப்பது சிம்ம ராசிக்காரர்கள் அனைவருக்குமே இந்த வாரம் ஏதோ ஒரு விதத்தில் அவர்களுடைய வயது, தகுதி, இருப்பிடத்திற்கேற்றார். போல நல்லவைகளும் மேன்மைகளும் நடக்கும், கிடைக்கும் என்பதைக் காட்டுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அளவிற்கு அப்படி ஒன்றும் சோதனைகளும், வேதனைகளும் இந்த வாரம் இருக்காது. அனைத்தையும் நீங்கள் சமாளித்துக் கொள்ளுகின்ற நல்ல வாரமாகவே இது அமைகிறது. மூன்றில் இருக்கும் செவ்வாய் உங்களுக்கு அனைத்தையும் தருவார்.
கணவன், மனைவி உறவில் கருத்துவேற்றுமைகள் இருக்கலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். மனம் ஒருநிலையில் இல்லாமல் இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. பிள்ளைகள் ஏதாவது வம்பிழுத்துக் கொண்டு வரலாம் என்பதால் குழந்தைகளின் மேல் அக்கறை வையுங்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
சிம்மம்:
கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது இப்போது சிம்மத்திற்குப் பொருந்தும். கடந்த சில மாதங்களாகவே சிம்மத்தினர் ஓரளவு நன்றாகத்தான் இருக்கிறீர்கள். குரு ஒன்பதாமிடத்தில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பது மிகவும் யோகம். சூரியனின் நீசபங்க வலுவால் தாமதித்து வந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு அரசு வேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். பணியில் இருப்போருக்கு சிக்கல்கள் தீர தொடங்கும். இளையவர்களுக்கு வேலை மாற்றம் நடந்து மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையை காட்ட முடியும்.
நண்பர்களால் மதிக்கப் படுவீர்கள். அந்தஸ்து, கௌரவம் நிலையாக இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் கிடைக்கும். அரசு ஊழியர்கள் வளம் பெறுவார்கள். காவல்துறையினருக்கு இது நல்ல மாதமாக அமையும். கலைத்துறையினர், விவசாயிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இந்த மாதம் லாபம் தரும். இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங், ரெக்கவரி வெரிபிகேஷன் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு நல்லவை நடக்கும். இந்த மாதம் முப்பதாம் தேதி நடக்க இருக்கும், ராகுகேது பெயர்ச்சியின் மூலமாக உங்களுக்கு நன்மைகளைச் செய்ய காத்திருப்பவரான குரு பகவான் கிரகண தோஷம் நீங்கப் பெறுகிறார். அடுத்த ஏப்ரல் வரை குருவால் இனிமேல் உங்களுக்கு நல்ல நன்மைகள் இருக்கும்.
வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவருக்கும் இது நல்ல நேரம். அடுத்த மாதம் முதல் புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவி கிடைக்கும். எந்த ஒரு செயலும் தற்போது வெற்றியாக முடியும். மாத பிற்பகுதியில் பதினைந்தாம் தேதிக்குப் பிறகு பணவரவுகளும், சந்தோஷமான நிகழ்ச்சிகளும் உண்டு. மாதம் முழுவதும் மன மகிழ்ச்சியோடும் புத்துணர்வோடும் இருப்பீர்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு பெரிய துன்பங்கள் எதுவுமே வரப் போவது இல்லை. பத்தாம் வீட்டோன் வலுப் பெறுவதால் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அலுவலகங்களில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயங்கள் இருக்கும். மனதிற்குள் சோகத்தை கொண்டிருந்தவர்கள் இனி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவீர்கள்.
3,5,7,10,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 26 -ம்தேதி அதிகாலை 5:57 மணி முதல் 28-ம் தேதி காலை 7:31 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலை பாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.