
கடகம்:
இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கும் ராகு கேதுப் பெயர்ச்சியில் தைரியத்தை கொடுக்கும் மூன்றாம் இடத்தில் கேது அமரப்போவதால், கடக ராசிக்கு அஷ்டமச் சனியின் காரணமாக நடக்கும் பிரச்னைகள் அனைத்தும் இனிமேல் தீர ஆரம்பிக்கும். குறிப்பாக பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தற்போது அனுபவித்து கொண்டிருக்கின்ற. தடைகளும், தாமதங்களும் இனிமேல் படிப்படியாக விலக ஆரம்பிக்கும். அஷ்டமச்சனி, 2025 ஏப்ரல். முதல்தான் விலகும் என்றாலும் கூட வரப்போகின்ற மாதங்களை சமாளிக்கும் தைரியம் ராகு கேது பெயர்ச்சியால் ஏற்படும்.
தொழிலில் முட்டுக்கட்டைகள் விலகும். வேலையில் நிம்மதி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நன்மைகள் உண்டு. கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். அந்தஸ்து கௌரவத்திற்கு குறைவு வராது. பண வரவு திருப்தியாக இருக்கும். பெண்களுக்கு அலுவலகங்களில் தொந்தரவுகள் குறையும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல்துறையினருக்கும் நன்மைகள் உண்டு. திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள், புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
கடகம்:
யோகாதிபதி செவ்வாய் மாதம் முழுவதும் குருவின் பார்வையில் இருப்பதால் கடகத்திற்கு இது நல்ல மாதமே. அதைவிட மேலாக இந்த மாதம் 30ம் தேதி நடக்க இருக்கும், ராகு கேது பெயர்ச்சியின் மூலமாக கேது, நல்லவைகளை, தைரியத்தை தரக் கூடிய மூன்றாமிடத்திற்கு மாறுவதால் கடகத்திற்கு இப்போது இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தும் குறைய ஆரம்பிக்கும். ஆயினும் இப்போது உங்களுக்கு அஷ்டம சனி நடந்து கொண்டிருப்பதால் நன்மைகள் எதையும் அனுபவிக்க இயலாத தடைகள் இருக்கும். ஏதேனும் தவறாக நடந்துவிடுமோ என்கின்ற மனக்கலக்கம் இப்போது உங்களுக்கு இருக்கும். கடும் முயற்சிகளுக்கு பின்பே வெற்றிகள் வரும். வேலை, தொழில் இடங்களில் கவனமாகவும், நிதானமாகவும் இருப்பீர்கள். மாத பிற்பகுதியில் எதிலும் நல்ல பலன்களும், முற்பகுதியில் அதிக முயற்சியும் தேவைப்படும்.
மாத பிற்பகுதி முதல் குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்கள் இருக்கும். வேலைக்கு செல்லும் மனைவியால் நன்மைகள் உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இது நல்ல மாதம். ஜீவனாதிபதி செவ்வாய் சுபத்துவமாக உள்ளதால் திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள், புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவருக்கு நன்மைகள் இருக்கும்.
கூட்டுத் தொழிலில் கசப்புக்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. பங்கு பிரிப்பது, தனிக்குடித்தனம் போவது போன்றவைகள் இப்போது கூடாது.
தேவையின்றி எவருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
சகோதரர்கள், பங்காளி போன்ற உறவினர்களிடம் விரோதம் வரும் மாதம் இது. அலுவலகத்திலும் உங்களுடைய பேச்சால் சில வீண் விரோதங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். கடன்தொல்லை எல்லை மீறாது. வயதானவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகமாகும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். சூரியன் நீசபங்கமாக இருப்பதால் தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. நீண்டதூர பிரயாணங்கள் இருக்கும். எதிலும் நம்பிக்கை இழந்தவர்களுக்கு இப்போது நம்பிக்கையூட்டும் சம்பவங்கள் நடக்கும். சுயதொழில் செய்வோர் கொஞ்சம் கஷ்டப்படத்தான் செய்வீரகள். ஆனால் தொழிலில் காலூன்றுவீர்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவைகளில் முகம் தெரியாத நபர்களோடு பேசாதீர்கள். வாட்ஸ்ஆப் மூலம் கவனம் திசை திரும்பும். தெரியாத விளம்பரங்கள், பணம் கேட்டு வரும் அழைப்புகள், ஓடிபி சொல்வது போன்றவைகளில் இந்த மாதம் கடக ராசியினர் கவனமாக இருக்க வேண்டும்.
1,2,3,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம் அதிகாலை 4.22 முதல் 26 -ம் தேதி அதிகாலை 5:57 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.