
மிதுனம்:
ராசிநாதன் புதன் உச்சம், 11 ல் ராகு, மூன்றில் சுக்கிரன் என கிரகநிலைகள் சாதகமாக அமைந்துள்ள வாரம் இது. இப்போது நீங்கள் ஆரம்பிக்கும் எந்த ஒரு நிகழ்வும், நற்பலன் தருவதாக அமையும் என்பதால், தள்ளி வைத்திருந்த விஷயங்களை இந்த வாரம் செய்து முடித்து வெற்றியடைவீர்கள். உங்களில் சிலருக்கு பங்குச் சந்தை, சூதாட்டம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் வெற்றியும், வருமானமும் கிடைக்கும். இருக்கும். எதிரிகளையும், எதிர்ப்புகளையும் இப்போது நீங்கள் ஜெயிக்க முடியும். மிதுனம் சாதிக்கும் வாரம் இது.
கடன்தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். இதுவரை பயமுறுத்திக் கொண்டிருந்த கடன்காரர்கள் இனிமேல் உங்கள் மேல் நம்பிக்கை வைப்பார்கள். புதிய கடன் வாங்கி பழைய கடன்களை அடைக்க முடியும். தொழில், வியாபாரம் நன்றாக நடக்கும். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு அனைத்து விஷயங்களும் கை கொடுக்கும். பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகள் வலுவாக நடப்பவர்கள் இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவீர்கள். கிரகங்கள் தருகின்ற இந்த நிலையைப் பயன்படுத்தி சுறுசுறுப்புடன் செயலாற்றினால் இனி எல்லாம் கைகூடும்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
மிதுனம்:
அக்டோபர் மாதம் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் புதன் உச்ச நிலையில் இருக்கிறார். புதனின் உச்ச நிலையால் மிதுனம் நன்மை பெறும். மாதத்தின் பிற்பகுதி இரண்டு வாரங்கள் அவர் ஐந்தாம் இடத்திற்கு மாறினாலும், அங்கே அவர் குருவின் பார்வையில் இருக்கிறார். ஆகவே இந்த அக்டோபர் மாதம் முழுவதும். ராசிநாதன் மிகுந்த வலிமையோடு இருப்பதால் எதுவும் கிடைக்கக்கூடிய நல்ல நிலைமை மிதுனத்திற்கு உண்டு. இளைய பருவத்தினருக்கு இனிமேல் முன்னேற்றங்கள் இருக்கும். ராசிநாதனின் வலுவால் மதிப்புக் கூடும்படியான நிகழ்வுகளும், சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்களும் உண்டு. அனைத்தும் கிடைக்கும் மாதம் இது. குறிப்பாக வெளிநாட்டில் இருப்பவருக்கு திருப்புமுனையான சம்பவங்கள் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக கஷ்டம் ஒன்றையே பார்த்திருந்த மிதுன ராசிக்காரர்களுக்கு, இனிமேல் இஷ்டப்படுகின்ற அனைத்தும் கிடைக்கக் கூடிய. நல்லவைகளின் ஆரம்ப மாதமாக இந்த அக்டோபர் இருக்கும். மிதுனத்தினர். அனைவரும் இனிமேல் நன்றாக இருப்பீர்கள்.
மாதம் முழுவதும் யோகாதிபதி சுக்கிரன் மூன்றில் குருவின் பார்வையில் இருப்பதால் வாழ்க்கைத் துணை, நண்பர்கள், பங்குதாரர்கள் விஷயத்தில் லாபங்களும், நன்மைகளும் இருக்கும். அதேநேரம் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது என்பதால் முக்கியமான விஷயங்களில் தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது நல்லது. சூரியன் நீசமாவதால் தந்தை வழி உறவினர்களிடம் சற்றுத் தள்ளி இருங்கள். அப்பாவின் ஆதரவு கிடைப்பது கஷ்டம். மனதில் நினைப்பதை பெரியவர்களிடம் சரியாக வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இதுவரை தொழில் நிலைமை சரி இல்லாமல் இருந்தவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். புதன் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நீண்டநாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். லாப ஸ்தானத்தில் உள்ள ராகு, குருவால் சுபத்துவம் அடைந்திருப்பதால் சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடுமாற்றம் என நல்ல மாற்றங்கள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். அந்நிய இன, மத, மொழிக்காரர்கள் உதவுவார்கள். நெருங்கிய சொந்தத்தால் வம்புச் சண்டைகள் உண்டு.
2,4,5,8,9,10,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 22 -ம்தேதி அதிகாலை 1:38 மணி முதல் 24-ம் தேதி அதிகாலை 4. 22 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பதும் நல்லது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.