
ரிஷபம்:
ராசிநாதன் சுக்கிரன் சனியின் பார்வையில் உள்ளதால் வார ஆரம்பத்தில் நடப்பவைகள் உங்களை கொஞ்சம் டென்ஷனாக்கினாலும், யோகாதிபதி புதன் உச்ச வலுவுடன் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காத வாரம் இது. ரிஷபத்தினர் எப்போதும் நிதானம் இழக்காதவர்கள் என்பதால் சாதகமற்ற விஷயங்களை கூட இப்போது உங்களுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து கொள்வீர்கள். அலுவலகத்தில் சில சங்கடமான நிகழ்வுகள் நடக்கும். உங்களுடைய புத்திசாலித்தனமான அணுகுமுறையால் அதை சமாளிப்பீர்கள்.
நான்காம் இடம் குருவின் பார்வையில் உள்ளதால் உங்களில் சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும். எதிர்ப்புகளையும் கடனையும் குறிக்கக்கூடிய ஆறாம் பாவகத்தில் செவ்வாய் கேதுவுடன் இணைந்திருப்பதால் வரும் வாரங்களில் சரளமான பணப் புழக்கமும், நல்ல வருமானமும் ஏற்படும். ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள், மார்க்கெட்டிங் துறையினர் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் இருக்கும்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
ரிஷபம்:
அக்டோபர் முதல் ரிஷப ராசிக்காரர்களின் குடும்பத்தில் அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். குறிப்பாக கணவன்-மனைவி அன்யோன்னியமும், சந்தோஷமும் இருக்கும். திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு சந்தோஷச் செய்திகள் உண்டு. இந்த மாதம் 30 ம் தேதி நடக்க இருக்கும் ராகு கேது பெயர்ச்சியின் மூலமாக, ராகு மிக நன்மைகளை கொடுக்கும் பதினோராம் இடத்திற்கு மாறப் போவதால் அடுத்த மாதம் முதல் எண்ணியது எண்ணம் போல் நடக்கும். கடந்த வருடங்களில் சாதிக்க முடியாமல் போனவைகள் எல்லாவற்றையும் இனி நிறைவேற்றிக் கொள்வீர்கள். இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கும் ராகு கேதுப் பெயர்ச்சியின் மூலமாக ரிஷப ராசியினர் சிறப்பான நிலையை அடையப் போகிறீர்கள். ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவைகளில் சாதனைகளை செய்ய வேண்டும், வருமானம் வரவேண்டும் என்கின்ற முயற்சிகளில் இருக்க கூடிய ரிஷபத்தினருக்கு இன்னும் ஒரு வருடத்தில் அனைத்தும் கைகூடும்.
சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. வெகு நாட்களுக்கு பிறகு இப்போது பொருளாதார நிலைமை மேம்படும். கையில் பணம் இல்லாமல் இருந்த நிலை மாறும். செலவிற்கு அடுத்தவர் கையை நம்பியிருந்த நிலைமை மாறி சொந்தமாக சம்பாதிப்பீர்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். வெளிநாட்டு விஷயங்கள் லாபம் தரும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுக்கிரன் வலுப் பெறுவதால் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். நீண்டநாட்களாக சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும். பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு.
கலைஞர்களுக்கு இது நல்லகாலமாக அமையும். சிறு கலைஞர்கள் பிரபலமாவற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது.
கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் உற்சாகத்துடனும், செயல் திறனுடனும் காணப்படுவீர்கள். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல மாதமே. காவல் துறையினருக்கு திருப்பங்கள் உண்டு.
அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல விதமாக நடக்கும். தந்தையைப் பற்றியோ தந்தைவழி உறவினர்கள் பற்றியோ கவலைகள் வரும். வயதான தந்தையை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறை வைக்க வேண்டும்.
1,2,3,7,10,11,16,17 ஆகிய நாட்களில் பணம் வரும். 19 -ம்தேதி இரவு 9.03 முதல் 22 -ம் தேதி அதிகாலை 1.38 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. ஆயினும் கெடுதல்கள் எதுவும் நடக்காது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.