adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

மகரம்:

மகரத்திற்கு இப்போது எதிர்காலத்திற்கான மாற்றங்கள் நடைபெறும் காலம். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் சில முக்கியமான மாற்றங்களை சந்திப்பீர்கள். வியாபாரிகள், தொழில் செய்பவர்கள் இனிமேல் அகலக்கால் வைக்கலாம். ஏழுக்குடைய சந்திரன் நீச்சமாக இருந்தாலும் பவுர்ணமி அமைப்பில் இருப்பதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவானாலும் எதையும் உங்களால் சமாளிக்க முடியும். பொதுவில் இது நல்ல வாரம்தான்.

உங்களில் சிலருக்கு வீண்விரயங்கள் தடுக்கப்பட்டு இனி நல்ல விஷயத்திற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நூதனக் கருவிகளை இயக்கும் துறையினர் முன்னேற்றம் அடைவார்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும்.  ராசிநாதன் சனி ஆட்சி நிலையில் இரண்டில் உள்ளதால் எதையும் சமாளிப்பீர்கள். மகரத்திற்கு சோதனைகள் முடிந்து விட்டன.   

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மகரம்:

ஜென்மச் சனியின் ஆதிக்கத்தினால் துவண்டு போயிருக்கும் மகர ராசியினருக்கு பிப்ரவரி மாத முன்பகுதியில் சுணக்கமான பலன்கள் இருந்தாலும், சுக்கிரனின் உச்ச பலத்தால் பிற்பகுதியில் நீங்கள் சுறுசுறுப்பாகி அனைத்தையும் சாதிக்கின்ற மாதமாக இது இருக்கும். சிலருக்கு 15-ம் தேதிக்கு மேல் நல்ல மாற்றங்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் நடப்பதும் இருக்கும். எதிர்ப்புகளைக் குறிக்கும் கிரக அமைப்புகள் வலுவிழப்பதால் உங்களுடைய உடல், மனம் இரண்டும் புத்துணர்ச்சியுடன் உற்சாகத்துடன் இருக்கும். பணிபுரியும் இடங்களில் பிரச்சனைகள் எதுவும் வராது.


 

தொழில், வியாபாரம், வேலை செய்யுமிடங்களில் இருந்து வந்த அதிருப்தி, ஏமாற்றம் ஆகியவை விலகி மனம் போல காரியங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாக குழந்தை பிறக்காதவர்களுக்கு இன்னும் ஆறு மாதத்திற்குள் குழந்தை உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். சிலருக்கு கையில் இருந்த சேமிப்பு கரையும். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இந்தமாதம் உண்டு. வேறு இன மொழி மதக்காரர்கள் உதவியாக இருப்பார்கள்.

வாக்கு ஸ்தானம் வலுவாக இருப்பதாலும், ஜீவன ஸ்தானமான பத்தாமிட  அதிபதி சுக்கிரன் உச்சமாக இருப்பதாலும் எவ்வித சிக்கல்களும் வராமல் அனைத்தையும் ஜெயிப்பீர்கள். கலக்கங்கள் எதுவும் இன்றி நீங்கள் கலக்கும் மாதம்தான் இது. ஜென்மச் சனியினால் கடன் தொல்லைகளையும், வருமானக் குறைவையும், தொழில் சிக்கல்களையும் சந்தித்தவர்களுக்கு இனிமேல் அது நிவர்த்திக்கப் படும். இளைஞர்களின் மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், உங்களால் வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள்.

1,4,5,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ம் தேதி மதியம் 3.03 முதல் 9-ம் தேதி அதிகாலை 2.49 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.