
மேஷம்:
ராசியில் குருவின் இணைவில் உள்ள ராகுவால் உங்களில் சிலருக்கு இந்த வாரம் மறைமுகமான வருமானங்கள் இருக்கும். பொதுவாக ராகு எப்படி சம்பாதித்தோம் என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பணம் தரும் கிரகம் என்பதால் இந்த வாரம் மேஷத்தினருக்கு மறைமுக வழிகளில் வருமானம் வரும். சாப்ட்வேர், கணக்கு, ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற மாற்றங்கள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சுக்கிர, செவ்வாய் இணைவால் சகோதரர்களால் நன்மை உண்டு. நண்பர்கள் உதவுவார்கள்.
நீண்டநாட்களாக போக்கு காட்டிக் கொண்டிருந்த ஒரு வாய்ப்பு இப்போது தேடி வரும். சீருடை அணியும் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும். அதிகாரிகளால் அடிக்கடி விரட்டப்படுவீர்கள் 30,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 3 -ம் தேதி அதிகாலை 12.28 மணி முதல் 5 -ம்தேதி அதிகாலை 3.23 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ யாரையும் நம்பி முடிவெடுப்பதோ இந்த நாட்களில் கூடாது. கூடுமானவரை எதையும் இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
மேஷம்:
மேஷ ராசியினர் எதையும் சாதிக்கும் மாதம் இது. உங்களில் சிலர் இதுவரை முடிக்க முடியாமல் இருந்த காரியங்களை முடித்துக் காட்டி நல்ல பெயர் எடுப்பீர்கள். மாதம் முழுவதும், இரண்டாவது வீட்டில் சுபத்துவமாக ராசிநாதன் செவ்வாய் இருப்பது யோகம். அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் மாத பிற்பகுதியில் உச்ச நிலையை அடைவது அதை விட யோகம். எனவே இந்த மாத பிற்பகுதியில் வயதிற்கு ஏற்றார்போல நல்ல பலன்கள் மேஷத்திற்கு இருக்கும். உங்களின் உடலும், உள்ளமும் சந்தோஷமாக இருக்கும். அனைத்து சிறப்புக்களும் இப்போது கிடைக்கும். யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள். எதிரிகள் உங்களை கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள். உங்களுக்கு தோல்வி இல்லை.
மாதத்தின் பிற்பகுதியில் புத்திர ஸ்தானாதிபதி சூரியன், சனியுடன் இணைவதால் பிள்ளைகள் விஷயத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். எதிலும் அடுத்தவர்கள் பேச்சை கேட்காமல் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை கடைப்பிடிப்பது நல்லது. குரு ஆட்சி நிலையில் இருப்பதால் பணம் வரும். மனதில் தைரியம் இருக்கும். எந்தச் சிக்கலையும் எளிதாக தீர்ப்பீர்கள். யாரையும் சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் கௌரவத்தோடு நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து உயரும்படியான சம்பவங்கள் நடக்கும்.
உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும். நோய்கள் கட்டுக்குள் இருக்கும். கடன் வாங்க தேவை இருக்காது. கடன் வாங்கினால் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிக முயற்சி இல்லாமலே சுப காரியங்கள் நடக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். இதுவரை முயற்சி செய்தும் நடக்காத சில விஷயங்கள் இனி முயற்சி இல்லாமலே வெற்றி பெறும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களைப் பிடிக்காதவர்கள் தேடி வந்து நட்பு பாராட்டுவர். இதுவரை அதிர்ஷ்டம் இல்லாதவராக கருதப்பட்டவர்கள் இனிமேல் அதிர்ஷ்டசாலியாக புகழப்படுவீர்கள். அலுவலகங்களில் மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும். மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள், சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள்.
1,2,3,7,10,11,16,17 ஆகிய நாட்களில் பணம் வரும். 13 -ம்தேதி இரவு 8.37 முதல் 16-ம் தேதி அதிகாலை 12.46 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. ஆயினும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.